Chettinad Chicken Varuval

தேவையான பொருட்கள்:

  • கோழி – ஒன்று
  • பெரிய வெங்காயம் – 2 (நடுத்தரமானது)
  • இஞ்சி – ஒரு அங்குலத் துண்டு
  • பூண்டு – 5 பல்
  • பச்சை மிளகாய் – 4
  • உலர்ந்த மிளகாய் – 5
  • கறிவேப்பிலை – 12 இலைகள்
  • மஞ்சள்தூள் – அரைத் தேக்கரண்டி
  • எலுமிச்சை சாறு – ஒரு மேசைக்கரண்டி
  • அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு
  • எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

  • முழுக்கோழியை நன்கு சுத்தம் செய்து, இரண்டு சரி பாதியாக வெட்டிக் கொள்ளவும். மார்பு, தொடைப் பகுதி சதைகளில் இரண்டு மூன்று ஆழமான வெட்டுக்கள் உண்டாக்கவும்.
  • வெங்காயம், பூண்டு, இஞ்சி ஆகியவற்றைத் தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், உலர்ந்த மிளகாய் ஆகியவற்றின் காம்புகளை நீக்கி நறுக்கின வெங்காயம், இஞ்சி, பூண்டுடன் சேர்த்து, சிறிது நீர் சேர்த்துக் கொண்டு, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  • கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள விழுதுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, அரிசி மாவு, தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • இந்த கலவையினை இறைச்சியின் மீது நன்கு பூசி, பிறகு நறுக்கின கறிவேப்பிலையில் பிரட்டி சுமார் இரண்டு மணி நேரங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து ஊறவிடவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடேறியதும் அதில் மசாலாத் தடவிய கோழி இறைச்சியை போட்டு எல்லா பக்கமும் வேகுமாறு இரண்டு நிமிடங்கள் பிரட்டி வேகவிடவும்.
  • பிறகு தீயைச் சற்று குறைத்து, வாணலியை மூடி வைத்து சுமார் பதினைந்தில் இருந்து இருபது நிமிடங்கள் வேகவிடவும். அவ்வபோது திறந்து இறைச்சியைத் திருப்பிப் போட்டு, மிதமுள்ள மசாலாவினையும் தடவி, தேவையெனில் சிறிது நீரினையும் தெளித்து, வேகவிடவும்.
  • இறக்குவதற்கு முன்பு இரண்டு நிமிடங்கள் தீயைச் சற்று அதிகமாக்கி, மேல்புறம் சற்று மொறுமொறுப்பாக வேகுமாறு செய்யவும். கருகிவிடக் கூடாது.
  • கறி பொன்னிறமானதும் எடுத்து, துண்டுகள் போட்டுப் பரிமாறவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *