கேரளா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:

  • நெத்திலி மீன் – கால் கிலோ
  • வெங்காயம் – 1 (பொடியாக வெட்டவும்)
  • தக்காளி – 3 (பொடியாக வெட்டவும்)
  • புளி – 50 கிராம்
  • மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்
  • தனியாத் தூள் – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
  • கடுகு – அரை டீஸ்பூன்
  • வெந்தயம் – அரை டீஸ்பூன்
  • தேங்காய் – அரை மூடி (அரைக்கவும்)
  • தேங்காய் எண்ணெய் – 50 கிராம்
  • கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவைக்கேற்ப

செய்முறை:

  • நெத்திலி மீனை சுத்தம் செய்து வைக்கவும்.தேங்காயை அரைக்கவும். புளியை கரைத்து அதில் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் போட்டு கரைக்கவும். பிறகு உப்பு, அரைத்த தேங்காயும் போட்டு கரைத்து வைக்கவும்.
  • தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, வெந்தயம் தாளித்து வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கிய பிறகு கரைத்து வைத்து இருக்கும் குழம்பை ஊற்றி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு மூடி விடவும்.
  • குழம்பு நன்றாக கொதித்த பிறகு தீயை குறைத்து வைக்கவும்.எண்ணெய் கசிந்து மேலே வந்த பிறகு தீயை தூண்டி மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். மீன் வெந்த பிறகு இறக்கி விடவும்.

One thought on “கேரளா மீன் குழம்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *