Posted on 11 May 2009 by Sarmila
தேவையான பொருட்கள் :
- பீட்ரூட் (துருவியது) – ஒரு கப்
- பச்சை பால் – இரண்டு கப்
- சர்க்கரை (அல்லது) சுகர் ப்ரீ – அரை கப்
- நெய் – நான்கு டேபிள்ஸ்பூன்
- முந்திரி – ஒரு டீஸ்பூன்
செய்முறை :
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் கொடுத்துள்ளவற்றில் பாதி அளவு பால் விட்டு காய்ந்ததும் பீட்ரூட் சேர்த்து மீதம் உள்ள பால் சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக விடனும்
- *நன்றாக வெந்ததும் பால் வற்றி இரண்டும் சேர்ந்து கொதிக்கும்..
- *கிளறிக்கொண்டே இருக்கணும்.
- *கொஞ்சம் கெட்டி ஆக ஆரமித்ததும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து எல்லாம் ஒன்று சேரும் வரை கிளறனும்.
- *அல்வா பதம் வர ஆரமித்ததும் சிறிது சிறிதாக நெய் சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கணும்.
- *துருவிய முந்திரி மற்றும் தேவைப்பட்டால் ஒரு பின்ச் சினமன் பௌடர் சேர்த்து இறக்கவும்.
- *டேஸ்டி ஹல்வா ரெடி.
Posted on 11 March 2009 by Sarmila
தேவையான பொருட்கள்:
- பேரீச்சம்பழம்(விதைநீக்கிபொடியாகநறுக்கிய) – 1கப்
- சீனி(சக்கரை) – 1கப்
- நெய் – 1கப்
- பால் -அரைகப்
- பாதாம்பருப்பு – தேவையானளவு
- முந்திரிப்பருப்பு – தேவையானளவு
- குங்குமப்பூ – தேவையானளவு
- வெந்நீர்(சுடுதண்ணீர்) – 1/2 கப்
செய்முறை:
- முதல் நாள் இரவு ஒரு பாத்திரத்தில் பேரீச்சம்பழத்தை போட்டு அதனுடன் வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு ஊற வைக்கவும் (பேரீச்சம்பழத்தின் அளவை விட சிறிதளவு அதிகமாக வெந்நீரை (சுடுதண்ணீரை) விட்டு (4 – 6மணித்தியாலம்) நன்றாக ஊறவிடவும் அதாவது பேரீச்சம்பழம் முழுவதும் வெந்நீரின் உள்ளே தாழ்ந்து இருக்கவேண்டும்).
- பேரீச்சம்பழம் ஊறிய பின்பு கிரைண்டரில்(மிக்ஸியில்) ஊறிய பேரீச்சம்பழம், பால் ஆகியவற்றை போட்டு நன்றாக அரைக்கவும்.
- ஒரு தட்டு முழுவதிற்கும் சிறிதளவு பட்டரை அல்லது நெய்யை பூசி வைக்கவும்.
- பின்பு அடுப்பில் தாட்சியை(வாணலியை) வைத்து சூடாக்கி அதில் சீனி(சக்கரை),தண்ணீர் ஆகியவற்றை போட்டு பாகு காச்சவும்.
- சீனி(சக்கரை) இளம்பாகு பதத்தை அடைந்ததும் அதனுள் அரைத்து வைத்திருக்கும் பேரீச்சம்பழ விழுது ,நெய் ஆகியவற்றை போட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
- அதன் பின்பு இதனுடன் முந்திரி, குங்குமப்பூ, பாதாம் பருப்பு ஆகியவற்றைபோட்டு நன்றாக மரஅகப்பையால் அல்லது கரண்டியால் கிளரவும்.
- இவை யாவும் ஒன்றாக சேர்ந்து பாத்திரத்தில் ஒட்டாத பதத்தை அடைந்ததும் பேரீச்சம்பழ அல்வா தயாராகி விட்டது.
- பின்பு தயாரான பேரீச்சம்பழ அல்வா உள்ள தாட்சியை (வாணலியை)அடுப்பிலிருந்து இறக்கவும்.
- அடுப்பிலிருந்து இறக்கிய தாட்சியில்(வாணலியில்) உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பட்டர் அல்லது நெய் பூசிய தட்டில் போடவும்.
- தட்டில்போட்ட பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக பரப்பி விடவும்.
- பின்பு அதன் மேல் கத்தியால் விரும்பிய வடிவங்களில் அத்துடன் வெட்டக்கூடிய ஆழத்திற்கு கோடுகளை போடவும்.
- இவை யாவற்றையும் செய்த பின்பு பேரீச்சம்பழ அல்வாவை நன்றாக ஆற விடவும்.
- இந்த அல்வா நன்றாக ஆறியதும் கோடு போட்ட இடங்களில் கத்தியால் வெட்டி எடுக்கவும்.
- தேவையான அளவு வெட்டி எடுத்த பேரீச்சம்பழ அல்வா துண்டுகளை ஒருதட்டில் விரும்பியவடிவத்தில் வைத்து அடுக்கவும்.
- அதன் பின்பு தட்டி உள்ள பேரீச்சம்பழ அல்வாவை பறிமாறவும்