பருப்பு உருண்டைக் குழம்பு

Ingredients:

  • துவரம் பருப்பு – 100 கிராம்
  • பட்டாணிப் பருப்பு – 50 கிராம்
  • தேங்காய் – அரை மூடி
  • சின்ன வெங்காயம் – 40
  • பூண்டு – 10 பல்
  • தக்காளி – 2
  • மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி
  • சோம்பு – 1/2 தேக்கரண்டி
  • பட்டை – 1 சிறியது
  • கிராம்பு – 2
  • புளி – நெல்லிக்காய் அளவு
  • வரமிளகாய் – 3
  • இஞ்சி – கொஞ்சம்
  • கசகசா – 2 தேக்கரண்டி
  • கடுகு, உளுந்து – தாளிக்க
  • கறிவேப்பிலை, கொத்துமல்லி – கொஞ்சம்
  • எண்ணெய் – 3 மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

செய்முறை :

  • துவரம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்
  • சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் உரித்துச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
  • தேங்காயில் பாதியை சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.
  • மீதம் உள்ள தேங்காய், கசகசா இரண்டையும் அரைத்துக் கொள்ளவும்.
  • 2 பருப்பையும் அரைத்துக் கொள்ளவும்.
  • பட்டை, கிராம்பு, இஞ்சி, வர மிளகாய் அரைத்துப் பருப்புடன் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
  • பாதி வெங்காயம், கறிவேப்பிலை பாதி, உப்புச் சேர்த்து அத்துடன் பிசைந்து உருண்டையாக உருட்டி இட்லித் தட்டில் வேக வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அடுப்பின் மீது அடி கனமான பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, பட்டை, சோம்பு, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
  • மீதம் உள்ள வெங்காயம், பூண்டு போட்டுப் பொன்னிறமாக வதக்கிய பின் தக்காளி போட்டு வதக்கவும்.
  • உப்பு, புளி கரைத்த தண்ணீருடன் 4 டம்ளர் தண்ணீர் விட்டு அரைத்த தேங்காய் விழுதை அதில் கரைக்கவும். அதில் மிளகாய்த் தூளைப் போட்டு நன்றாகக் கொதிக்க விடவும்.
  • கொதிக்கும் போது வேக வைத்த உருண்டைகளை அதில் போட்டுக் கொஞ்சம் கெட்டியானதும் கொத்துமல்லித் தழை கொஞ்சம் போட்டு இறக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *