Chettinad Chicken Briyani

தேவையான பொருட்கள்:

  • பாசுமதி அரிசி – 1 1/2 கப்
  • கோழி – 1/2 கிலோ (எலும்போடு பெரிதாக வெட்டிவைத்தது)
  • வெங்காயம் – 1 (பெரிதாக நறுக்கியது)
  • தக்காளி – 1 ( பொடியாக நறுக்கியது)
  • பச்சை மிளகாய் – 5
  • இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
  • தேங்காய் பால் – 1 1/2 கப்
  • தண்ணீர் – 1 1/2 கப்
  • கொத்தமல்லி, புதினா – 1/2 கப்
  • தயிர் – 1/2 கப்
  • எண்ணெய் – 100 மில்லி
  • நெய் – 3 தேக்கரண்டி
  • உப்பு
  • மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
  • மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – 1/4 தேகரண்டி
  • பட்டை
  • லவங்கம் – 5
  • பிரியாணி இலை – 1
  • ஏலக்காய் – 3

செய்முறை:

  • கோழியுடன் பாதி தயிர், மஞ்சள் தூள், பாதி உப்பு சேர்த்து கிளறி ஊறவிடவும்.
  • அரிசியை கழுவி 20 நிமிடம் ஊறவைக்கவும். தேவையான பொருட்களை எடுத்து தயாறாக வைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் எண்ணெய், 2 தேக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் பட்டை, பிரியாணி இலை, லவங்கம், ஏலக்காய் போட்டு பொரிய விடவும்.
  • இதில் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.
  • இதில் நறுக்கிய தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.
  • இத்துடன் மீதமிருக்கும் தயிர், மிளகாய் தூள், மீதம் உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்த்து கிளறி 3 நிமிடம் வைக்கவும்.
  • நன்றாக குழைந்து மிளகாய் தூள் வாசம் போனதும், ஊற வைத்துள்ள கோழியை சேர்த்து வேக விடவும்.
  • கோழி வெந்ததும் தேங்காய் பால், தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • கொதி வந்ததும் அரிசியை சேர்த்து மூடி முக்கால் பாகம் வேக விடவும்.
  • இப்போது அதன் மேல் கரம் மசாலா தூள் தூவி, ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சிறுந்தீயில் 10 – 15 நிமிடம் தம் போடவும்.
  • சாதம் முழுதாக வெந்ததும் இறக்கி விடவும். சுவையான செட்டிநாட்டு கோழி பிரியாணி தயார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *