Brinjal rice

தேவையானப்பொருட்கள்:

  • அரிசி – 1 கப்கத்திரிக்காய் – 4 (நடுத்தர அளவு)
  • பெரிய வெங்காயம் – 1
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • நெய் – 2 டேபிள்ஸ்பூன்
  • கறிவேப்பிலை – சிறிது
  • உப்பு – 1 டீஸ்பூன் அல்லதுதேவைக்கேற்றவாறு
  • வாங்கி பாத் பொடி செய்வதற்கு:

  • காய்ந்த மிளகாய் – 2 அல்லது 3
  • தனியா – 1 டேபிள்ஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 டீஸ்பூன்
  • உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
  • பட்டை – 1 சிறு துண்டு
  • கிராம்பு – 2
  • தேங்காய்த்துருவல் – 1 டேபிள்ஸ்பூன்
  • உப்பு – 1/2 டீஸ்பூன்எண்ணை – 2 டீஸ்பூன்

செய்முறை:

  • ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
  • கடைசியாக தேங்காய்த்துருவலைப் போட்டு வதக்கி எடுத்து ஆற விடவும். வறுத்தெடுத்த பொருட்கள் எல்லாம் ஆறியவுடன் உப்பைச் சேர்த்து நன்றாகப் பொடி செய்துக் கொள்ளவும்.
  • அரிசியை வேக வைத்து சாதமாக்கிக் கொள்ளவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
  • கத்திரிக்காயை நீள வாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும்.
  • பின்னர் அதில் கறிவேப்பிலை மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கியவுடன், கத்திரிக்காய், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து காய் வேகும் வரை வதக்கவும்.
  • பின் அதில் வாங்கி பாத் பொடியைத்தூவிக் கிளறவும். கடைசியில் சாதத்தைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
  • பொரித்த அப்பளம், வடவம் அல்லது சிப்ஸ் சேர்த்து சாப்பிட சுவையாயிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *